News November 23, 2024
செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமான பணப்பரிமாற்ற வழக்கு நவ.29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.கார்த்தி முன்னிலையில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார். அமலாக்கத்துறை தரப்பில் தடவியல் துறை கணினி பிரிவு உதவி இயக்குனர் செந்தில் பாலாஜி தரப்பு குறுக்கு விசாரணை நடத்தினர். தொடர்ந்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Similar News
News October 26, 2025
வேளாண்மை பல்கலை.,யில் மண்புழு உரத் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 26 நாள் இலவச திறன் சார்ந்த மண்புழு உரத் தயாரிப்பு பயிற்சி 30.10.2025 முதல் 28.11.2025 வரை நடைபெற உள்ளது. இதில் 18–35 வயதுடைய பட்டதாரிகள், டிப்ளமோ, விவசாயிகள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம். முன்பதிவு அவசியம். மேலும் விவரங்களுக்கு 9443209452 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது.
News October 25, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (25.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 25, 2025
BREAKING: கோவையில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

கோவை, தெலுங்குபாளையம் கார் வாட்டர் வாஷ் நிறுவன ஊழியர்கள் ஹரிஷ், பிரகாஷ் ஆகியோர் நண்பர்களான அகத்தியன், சபா, பிரபாகரன் ஆகியோருடன் நேற்றிரவு காரில் சிறுவாணி சாலையில் பச்சாபாளையம் சென்று கொண்டு இருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தின்மீது மோதியதில் இளைஞர்கள் 4 பேர் பலியாகினர். மேலும், சிகிச்சையில் இருந்த பிரபாகரன் என்பவரும் இன்று மாலை உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.


