News January 16, 2026
செந்தில் பாலாஜிக்கு அடுத்த அதிர்ச்சி

செந்தில்பாலாஜி மீதான பண மோசடி வழக்கை தீவிரப்படுத்தக்கோரி, SC-ல் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இம்மனு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் 2000-க்கும் மேற்பட்ட சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதால், விசாரணையில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பலர் பிறழ் சாட்சிகளாக மாறி வருகின்றனர். எனவே, குற்றத்துக்கு உடந்தையாக இருந்தோரை முதலில் விசாரித்து முடிக்க வேண்டும் என மனுதாரர் Y.பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.
Similar News
News January 25, 2026
அதிக தொகுதிகளை கேட்பது ஏன்? விஜய பிரபாகரன் விளக்கம்

2026 தேர்தல் நெருங்கிய நிலையில், தேமுதிக இன்னும் கூட்டணியை இறுதி செய்யவில்லை. திமுக, அதிமுக என இரு கட்சிகளிடமும் பேசி வரும் தேமுதிக, அதிக தொகுதிகளை கேட்பதால் கூட்டணி இறுதியாகவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தங்களுக்கான உரிமையையே கூட்டணி கட்சிகளிடம் கேட்பதாகவும், உங்களை ஆட்சியில் அமர வைக்கவே 20-30 தொகுதிகளை கேட்பதாகவும் விஜய பிரபாகரன் விளக்கமளித்துள்ளார். DMDK கேட்கும் தொகுதிகள் கிடைக்குமா?
News January 25, 2026
அலர்ட்.. 12 மாவட்டங்களில் மழை பொளந்து கட்டும்

குளிர் காலமே மெல்ல மெல்ல விலகி வரும் நிலையில், தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 7 மணி வரை செங்கை, மயிலாடுதுறை, சென்னை, கடலூர், காஞ்சி, நாகை, ராணிப்பேட்டை, தஞ்சை, திருவள்ளூர், திருவாரூர், தி.மலை, விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என IMD கணித்துள்ளது. அதனால், மாலை நேரங்களில் அவசியமின்றி வெளியே செல்வதை தவிருங்கள் மக்களே!
News January 25, 2026
சினிமா பாணியை மாற்றுவாரா விஜய்?

கட்சி தொடங்கியது முதலே இலைமறைக்காயாகவே விஜய் பேசி வருகிறார். இன்று கூட <<18953053>>திமுக,<<>> அதிமுகவை மறைமுகமாகவே விமர்சித்தார். வேலுநாச்சியார் வரலாறைக் கூறி, <<18953147>>கூட்டணி<<>> பற்றிய நிலைப்பாட்டையும் (தனித்து போட்டி) மறைமுகமாகவே தெரிவித்தார். இவ்வாறு பேசுவது சினிமாவுக்கு நன்றாக இருக்கலாம், பொதுமக்களிடம் தெளிவான புரிதலை ஏற்படுத்துமா என அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?


