News April 4, 2025

செண்பகவல்லியம்மன் கோவில் நாளை கொடியேற்றம்

image

கோவில்பட்டியில் உள்ள அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி திருவிழா நாளை (ஏப்.5) காலை கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு திருவனந்தல் பூஜை நடைபெறுகிறது. அதன் பின் 7 மணியிலிருந்து 8 மணிக்குள் கோவில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 10, 2025

பல்லாக்கு கட்டிடம் கனிமொழி எம்.பி. திறப்பு

image

தூத்துக்குடி மாவட்டம் பன்னீர் குளத்தில் உள்ளூர் வளர்ச்சி திட்டம் சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமையில், நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி எம்.பி கனிமொழி கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

News April 10, 2025

சாத்தான்குளம் மாணவி தமிழக அளவில் சாதனை

image

சாத்தான்குளத்தைச் சேர்ந்த லிதியா என்பவர் தற்போது வெளியான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய Group 1 தேர்வு முடிவில் தமிழகத்தில் 4வது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவருக்கு துணை ஆட்சியர் பணியிடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News April 10, 2025

தனியார் பள்ளி ஆசிரியருக்கான வேலைவாய்ப்பு முகாம்

image

தூத்துக்குடியில் உள்ள ஜி.யு போப் கல்லூரியில் சிபிஎஸ்இ, மெட்ரிக் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ஏப்.12 அன்று காலை 9 – 2.30 மணி வரை நடைபெற உள்ளது. 14 க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் பங்கேற்கும் இம்முகாமில் பி.எட் அல்லாத, முன் அனுபவம் இல்லாதவர்களும் கலந்து கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்

error: Content is protected !!