News January 29, 2026
செட்டிபாளையம் அருகே விபத்து: ஒருவர் பலி

சேலத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவர் பீளமேட்டில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். நேற்று இவரது அக்கா ஆனந்தி என்பவரது வீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பழனிவேல், பின் பைக்கில் செட்டிபாளையம் – போத்தனூர் சாலையில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு முன் சென்ற லாரியின் ஓட்டுநர், திடீரென பிரேக் போட்டுள்ளார். இதில் நிலைதடுமாறிய பழனிவேல், லாரியின் பின்புறத்தில் மோதி உயிரிழந்தார்.
Similar News
News February 1, 2026
பொள்ளாச்சி அருகே கோர விபத்து: 2 பேர் பலி

பொள்ளாச்சி அருகே பெத்தநாயக்கணுாரைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர், நேற்று தென்சங்கம்பாளையம் ஆனைமலை சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் பிராகாஷ் மற்றும் எதிரே பைக்கில் வந்த மணிகண்டன் என இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News January 31, 2026
கோவை – ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

பயணிகள் வருகை அதிகரிப்பால் கோவை – ஜெய்ப்பூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகச் சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. ரயில் எண் 06181: பிப்ரவரி 5, 12, 19 (வியாழன்) அதிகாலை 2.30-க்கு கோவையிலிருந்து புறப்படும். ரயில் எண் 06182: பிப்ரவரி 8, 15, 22 (ஞாயிறு) இரவு 10.05-க்கு ஜெய்ப்பூரிலிருந்து புறப்படும். திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும் இந்த ரயில்களுக்குப் பயணிகள் முன்பதிவு செய்யலாம்.
News January 31, 2026
கோவை: இரவு ரோந்து காவலர் விபரம்!

கோவை மாவட்டத்தில் இன்று (31.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


