News August 31, 2025

செட்டிகுளத்தில் பட்டப் பகலில் பைக்கை திருடிய வாலிபர்

image

செட்டிகுளத்தில் பைக்கை திருடிய வாலிபரை பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இவர் நேற்று செட்டிகுளம் சென்ற அருண்குமார் (29) அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு SBI வங்கிக்கு சென்று உள்ளார். அப்போது அங்கு வந்து ஒருவர் அவரது பைக்கை திருட முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்து அருண்குமார் மற்றும் அங்கிருந்தவர்கள் அவரைப் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Similar News

News September 1, 2025

பெரம்பலூர்: தெருநாய்கள் அச்சுறுத்தலா? உடனே புகார்

image

தமிழகத்தில் அண்மைக்காலமாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெரு நாய்கள் கடிக்கு ஆளாகின்றனர். சில நேரங்களின் உயிரிழப்பு கூட ஏற்படுகிறது. இனி தெருக்களில் கூட்டம் கூட்டமாகத் திரியும் தெரு நாய்களை கண்டு அச்சமடையவோ, கவலையோ வேண்டாம். உங்கள் பகுதியில் தெரு நாய்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க 1100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதை SHARE பண்ணுங்க!

News September 1, 2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 362 மனுக்கள் வழங்கல்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளினி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (செப்.01) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 362 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு உள்ளிட்ட துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News September 1, 2025

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 3,789 நபர்கள் பயன்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் நலங்காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் வட்டத்திற்கு 1 முகாம் வீதம் மாவட்டத்திலுள்ள நான்கு வட்டத்திற்கும் நான்கு முகாம்கள் இதுவரை நடைபெற்றுள்ளன. நடைபெற்ற நலம்காக்கும் ஸ்டாலின் முகாமில் இதுவரை 3,789 நபர்கள் கலந்து கொண்டு முகமை பயன்படுத்தி உள்ளனர் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!