News April 8, 2025

செஞ்சியில் நாய்க்கு கட்டப்பட்ட நினைவிடம் 

image

1914ல் செஞ்சியை பிரெஞ்சுகாரர்கள் ஆட்சி செய்து வந்த போது, திண்டிவனம் சாலையில் உள்ள பங்களாவில் குடியிந்த பிரெஞ்சுகாரர்கள் தங்கள் வளர்ப்பு நாய் இறந்துவிட, அங்கேயே புதைத்து கல்லறை அமைத்து அதில் “பிராந்தா ஏ டியர் டாக் நவம்பர் 26 1914” என எழுதி வைத்துள்ளனர். நூற்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், நாய்க்கு கட்டப்பட்ட கல்லறை இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஷேர் பண்ணுங்க..

Similar News

News September 22, 2025

காவல்துறை எச்சரிக்கை: போலி ஆன்லைன் முதலீடுகளில் கவனம்

image

‘முதலீடு செய்தால் இரண்டு மடங்கு லாபம்’ என வரும் போலியான அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் இணையதள இணைப்புகளை நம்ப வேண்டாம் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. போலீஸ் டுடே குற்றப் புலனாய்வுப் பத்திரிகையில் இன்று (செப். 22) வெளியிட்ட அறிவிப்பில், மோசடிகள் மூலம் பொதுமக்கள் தங்கள் பணத்தை இழக்க நேரிடும், எனவே விழிப்புடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

News September 22, 2025

விழுப்புரத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். ஒவ்வொரு மாதமும் திங்கட்கிழமை நடைபெறும் இந்த கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து வருகின்றனர்.

News September 22, 2025

விழுப்புரம்: அச்சுறுத்தும் கஞ்சா – அதிரடி கைது

image

விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடு பேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த 5 இளைஞர்களை போலீசார் இன்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5.5 கிலோ கஞ்சா, செல்போன் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

error: Content is protected !!