News April 28, 2025
செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 6.55 மணிக்கு புறப்படும் செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16848) திங்கட்கிழமை இன்று (ஏப்.28) விருதுநகர் ரயில் நிலையத்தில் இருந்து மாற்றுப் பாதையில் இயங்கும். வழக்கமாகச் செல்லும் மதுரை, திண்டுக்கல் வழியாக செல்லாது. மாற்றாக விருதுநகர், காரைக்குடி, திருச்சி வழியாக மயிலாடுதுறை வந்தடையும் என அறிவிக்கப்பட்டது.
Similar News
News April 28, 2025
மயிலாடுதுறையில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை

மயிலாடுதுறையில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள CUSTOMER SUPPORT EXECUTIVE பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.15,000 ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு டிகிரி முடித்தவர்கள் <
News April 28, 2025
சத்துணவு மையத்தில் வேலை: கடைசி வாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்பட்டு வரும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 87 சமையல் உதவியாளர் பணியிடங்களை நேரடி பணி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
News April 28, 2025
சிறப்பு வேட்டை: லாட்டரி விற்றவர்கள் 12 பேர் கைது

மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி சட்டவிரோத லாட்டரி விற்பனையை தடுக்கும் பொருட்டு 5 குழுக்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு நேற்று ஒரு நாள் சிறப்பு வேட்டை நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.1,42,000 மற்றும் 9 செல்போன்கள் மற்றும் விற்பனைக்கு வைத்திருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.