News September 27, 2025

செங்கோட்டை – ஈரோடு இரயில் சேவையில் மாற்றம்

image

ஈரோடு- கரூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே மேம்பாலங்களில் செப்-30ம் தேதி பணிகள் நடைபெற இருப்பதால் செங்கோட்டை – ஈரோடு அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 16846) செங்கோட்டையில் இருந்து காலை 5:10 புறப்பட்டு கரூர் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும். ஈரோடு வரை சேவையானது பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தென்னக இரயில்வே தெரிவித்துள்ளது.

Similar News

News September 27, 2025

தென்காசி: பேருந்தில் மூதாட்டியிடம் கைவரிசை

image

தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரையைச் சேர்ந்த திருமலையாச்சி (75) என்பவர் சுரண்டையிலிருந்து சேர்ந்தமரம் செல்ல அரசுப் பேருந்தில் பயணித்தார். சுரண்டை அருகே ஆலடிப்பட்டி விலக்குப் பகுதியில் பேருந்து சென்றபோது, அவர் அணிந்திருந்த 24 கிராம் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சுரண்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 27, 2025

தென்காசி:10th முடித்தால் ரூ.35,000த்தில் வேலை உறுதி.!

image

தமிழக அரசின் TNRights திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் 1,096 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு 10, 12th , டிகிரி முடித்தவர்கள், உரிய பணி அனுபவம் உள்ளவர்கள் என பலரும் விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.12,000 – ரூ.35,000 வரை. அக்.14க்குள் இங்கு <>கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். பணியின் அடிப்படையில் நீட்டிப்பு செய்யப்படும். நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க. SHARE பண்ணுங்க

News September 27, 2025

தென்காசி: ஆட்டோ கவிழ்ந்து தொழிலாளி உயிரிழப்பு

image

சுரண்டை பகுதியை சேர்ந்த தொழிலாளி கோ.கனகராஜ் (67). இவர் வியாழக்கிழமை பிற்பகல் சேர்ந்தமரத்தில் இருந்து ஆட்டோவில் காய்கறி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சுரண்டையை நோக்கி சென்றுபோது குலையநேரி அருகே எதிர்பாராத விதமாக வாகனம் கவிழ்ந்ததில் கனகராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சுரன்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!