News November 20, 2024
செங்கோட்டை அருகே இலவச பயிற்சிக்கு அழைப்பு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,“சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள தென்காசி மாவட்ட கிராமப்புற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சோலார் பேனல் பொருத்துதல் மற்றும் பழுது பார்த்தல் இலவச பயிற்சி வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி இலத்தூரில் உள்ள அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டது.
Similar News
News December 10, 2025
தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு; ஆட்சியர் தகவல்

தென்காசி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை டித்வா புயல் காரணமாக நீரில் மூழ்கியுள்ள பயிர்களைப் பாதுகாத்திட விவசாயிகள் எடுக்கப்பட்ட வேண்டிய பயிர் மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் அறிவுரை. மேலும் வயல்களில் தண்ணீர் தேங்கா வண்ணம் விவசாயிகள் பார்த்துக் கொள்ள வேண்டும் என செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
News December 10, 2025
தென்காசி: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடனுதவி!

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News December 10, 2025
சங்கரன்கோவிலில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

சங்கரன்கோவில் அம்பேத்கர் நகரை 1ம் தெருவை சேர்ந்த சீனிவாசன் (32) என்பவர் குடும்ப பிரச்சினை காரணமாக இன்று காலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சங்கரன்கோவில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


