News October 17, 2025

செங்கை: 10th போதும், மத்திய அரசில் வேலை!

image

மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் 7,267 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், செவிலியர், விடுதிக்காப்பாளர், செயலக உதவியாளர், கணக்காளர் போன்ற பணிக்கு விண்ணப்பிக்கலாம். 10th, +2, டிகிரி, பி.எட் & நர்சிங் படித்தவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.18,000-ரூ.2,09,200 வரை சம்பளம் வழங்கப்படும். கடைசி தேதி அக்.23. ஷேர் பண்ணுங்க.

Similar News

News October 18, 2025

செங்கல்பட்டு அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை

image

மறைமலை நகர் அடுத்த கருநிலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தேவேந்திரன், கிருஷ்ணவேணி, தம்பதி. இவர்களது வீட்டில் நேற்று (அக்.17) காலை யாரும் இல்லாத போது வீட்டில் நுழைந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.

News October 18, 2025

பருவமழை குறித்து ஆய்வு கூட்டம்

image

செங்கல்பட்டு, தாம்பரம் மாநகராட்சி, வடகிழக்கு பருவமழை வர இருப்பதை ஒட்டி முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த கண்காணிப்பு அலுவலர் மேலாண்மை இயக்குநர், திறன் மேம்பாட்டு கழகம் கிராந்திகுமார் பாடி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கலெக்டர் தி.சினேகா, மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News October 17, 2025

செங்கல்பட்டில் இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்!

image

செங்கல்பட்டில் இன்று (அக்.17) இரவு 10 மணி முதல் காலை 6 வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!