News January 8, 2026

செங்கை: ரேஷன் பொருட்கள் வாங்குவதில் பிரச்னையா?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) செங்கல்பட்டு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

Similar News

News February 5, 2026

செங்கல்பட்டு: ஏறி இறங்கிய தண்ணீர் லாரி; துடிதுடித்து பலி!

image

வேளச்சேரியை அடுத்த பெரிய கோவிலம்பாக்கம், கே.பி.ஜி., நகரைச் சேர்ந்தவர் மாதவன் (70). இவர், நேற்று காலை எஸ்.கொளத்துார் பிரதான சாலை வழியாக நடந்து சென்றார். கோவிலம்பாக்கம் குளம் அருகே சென்ற போது, ரிவர்ஸில் வந்த தண்ணீர் லாரி மோதி உயிரிழந்தார். பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் விபத்து ஏற்படுத்திய தண்ணீர் லாரி ஓட்டுநரான மடிப்பாக்கம், ராஜாஜி நகரைச் சேர்ந்த சதீஷ் (33) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

News February 5, 2026

செங்கல்பட்டு: நடுவழியில் பற்றி எரிந்த கார்

image

சென்னை தி.நகர் பகுதியை சேர்ந்தவர் கோபி, இவர் நேற்று தனது மனைவியுடன் சென்னையில் இருந்து பொத்தேரி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் செல்லும்போது திடீரென காரின் முன் பக்கத்தில் இருந்து புகை வந்தது. சுதாரித்துக்கொண்ட கோபி காரை விட்டு இறங்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், கார் தீயில் எரிந்த நாசமானது.

News February 5, 2026

செங்கல்பட்டில் விவசாயி தற்கொலை!

image

செய்யூர் தாலுகா நடுத்திட்டு முகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுகுமாரன்(45). விவசாயியான இவர், தனது மனைவி பிரவீனா உடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக 3 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினார். தொடர்ந்து, மாதவரம் 200 அடி சாலைக்குச் சென்று அங்குள்ள தண்ணீர் குழாயில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று(பிப்.4) அழுகிய நிலையில் சடலத்தை மீட்ட போலீசார், இதுகுறித்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!