News January 12, 2026

செங்கை: பெண் தூக்கி வீசப்பட்டு துடிதுடித்து பலி!

image

ஊரப்பாக்கம் அருகே காரணைப்புதுச்சேரியைச் சேர்ந்த பூர்ணிமா (34), தனது கணவர் சரவணகுமாருடன் மோட்டார் சைக்கிளில் சினிமா பார்க்கச் சென்றார். அப்போது அவ்வழியாக வந்த லாரி மோதியதில், பின்னால் அமர்ந்திருந்த பூர்ணிமா தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநர் நிரஞ்சனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 6, 2026

செங்கல்பட்டு: உடல் தூக்கி வீசப்பட்டு பலி!

image

ஆலந்துார், மோரிசன், 3வது தெருவை சேர்ந்தவர் எட்வின் (49) கொத்தனார். கடந்த 29ம் தேதி, பைக்கில் ஜி.எஸ்.டி., சாலை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மீனம்பாக்கம் பகுதியில், முன்னால் சென்ற காரை இடதுபுறமாக முந்த முயன்றபோது, அதே காரில் மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் காயமடைந்தவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News February 5, 2026

செங்கல்பட்டு இன்று வெளியே செல்வோர் கவனத்திற்கு

image

செங்கல்பட்டு இன்று (பிப்ரவரி-05) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 5, 2026

செங்கல்பட்டு: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

செங்கல்பட்டில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!