News January 5, 2026
செங்கை: படுஜோர் விற்பனை; தட்டி தூக்கிய போலீஸ்

பொழிச்சலூர் மற்றும் பல்லாவரம் பகுதிகளில் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனை செய்த 6பேரை சங்கர் நகர் போலீசார் கைது செய்தனர்.தடாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் பல்லாவரம், திரிசூலம், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்றது உறுதியானது. கைதான கிஷோர், அசோக்குமார் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Similar News
News February 8, 2026
செங்கை: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’!

நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card போன்ற Spam Calls வந்தாலே, செம கடுப்பாகும். செங்கல்பட்டு மக்களே, இனி டென்ஷன் வேண்டாம். தேவையில்லாத அழைப்புளை ஈசியாக தவிர்க்கலாம். ஆம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம் (அ) ‘START 0’ என 1909-க்கு SMS அனுப்பினால் Spam Call-ல் வரவே வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News February 8, 2026
தாம்பரம்: திருச்சி – தாம்பரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

பயணிகளின் வசதிக்காக திருச்சி – தாம்பரம் சிறப்பு ரயில் (06190) சேவை வரும் பிப்ரவரி 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் 5 நாட்கள் இயங்கும் இந்த ரயில், மதியம் 12:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். குறைந்த கட்டணத்தில் (ரூ.120 – ரூ.160) முன்பதிவு வசதியுடன் கூடிய இந்தச் சேவையைத் தாம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பயணிகள் இனி வரும் நாட்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
News February 8, 2026
செம்மஞ்சேரி: தகராற்றில் ஒருவருக்கு கத்தி குத்து

செம்மஞ்சேரி சுனாமி நகரைச் சேர்ந்த சிவா (30) என்பவர், நேற்று முன்தினம் தனது மனைவியைக் காணச் சென்றபோது அங்கு சூர்யா (22) என்பவரைச் சந்தித்ததில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சூர்யா, சிவாவை கத்தியால் வயிற்றில் குத்தினார். படுகாயமடைந்த சிவா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த சூர்யாவை செம்மஞ்சேரி போலீசார் நேற்று கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


