News January 17, 2026
செங்கை: இளம்பெண்ணை ஏமாற்றிய மருத்துவர்!

தாம்பரம், நெடுங்குன்றத்தைச் சேர்ந்த மருத்துவர் ராம்கி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளது. இந்த நிலையில், தனக்கு திருமணமானதை மறைத்து, உடன் வேலை செய்யும் சக மருத்துவரை காதலிப்பதாகக் கூறி அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளம்பெண் அளித்த புகாரின் பேரில், ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம்கியைச் சிறையில் அடைத்தனர்.
Similar News
News January 25, 2026
செங்கை: சினிமா பாணியில் கடத்தல் சம்பவம்!

செங்குன்றம் மெக்கானிக் கடையில் 60 ஆயிரம் ரூபாய் திருடிவிட்டு தலைமறைவான சரவணனை, உரிமையாளர் அஸ்லாம் இன்ஸ்டாகிராமில் பெண் குரலில் பேசி வரவழைத்துள்ளார். ஆசையில் வந்த சரவணனை கார் கும்பல் கடத்தியபோது, போலீசார் சினிமா பாணியில் துரத்திச் சென்று மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட அஸ்லாம் உட்பட 7 பேரை ஒட்டேரி போலீசார் கைது செய்து காரைப் பறிமுதல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
News January 25, 2026
செங்கை: பிஞ்சு உயிர் துடிதுடித்து பலி!

ஜமீன் பல்லாவரத்தைச் தஷீத் (7), தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பு பயின்று வந்தான். கடந்த 2 நாட்களாக வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட சிறுவன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று திடீரென மயங்கி விழுந்தான். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 25, 2026
வேளச்சேரி – பரங்கிமலை ரயில் சேவை அடுத்த மாதம் துவக்கம்

பல ஆண்டுகளாகக் கிடப்பில் இருந்த வேளச்சேரி – பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவை திட்டம், தற்போது நிறைவுப் பகுதியை எட்டியுள்ளது. இந்த நிலையில், இந்த ரயில் சேவை அடுத்த மாதம் முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொங்கலுக்கு பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், சில நிர்வாகக் காரணங்களால் இவ்வழி தடத்தில் ரயில் சேவை தாமதமானது.


