News October 30, 2025
செங்கை: இளம்பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை

மேடவாக்கம் அடுத்த பள்ளிக்கரணை பகுதியில் வசித்து வந்த ஐடி பெண் ஊழியர் வீட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு ஏசி பழுதான நிலையில், அதை சரி செய்ய வந்த புரசைவாக்கம் அற்புதராஜ் (32), அருண் (31) இருவரும் சேர்ந்து அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றம் 2 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறை 16,000 அபராதம் விதித்து நேற்று உத்தரவிட்டது.
Similar News
News October 30, 2025
செங்கல்பட்டு: முக்கிய உதவி எண்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (அக்.29) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 29, 2025
செங்கல்பட்டு: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், www.tnesevai.tn.gov.in , என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News October 29, 2025
செங்கல்பட்டு: ரயில்வேயில் 3,058 பணியிடங்கள்.. APPLY NOW!

செங்கல்பட்டு மக்களே, 2025-ம் ஆண்டுக்கான கமர்சியல் உடன் டிக்கெட் கிளார்க், டைப்பிஸ்ட் போன்ற பணிகளுக்கு 3,058 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 12th படித்து 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம. இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.27ம் தேதிக்குள்<


