News January 6, 2026
செங்கை: இன்ஸ்டா live-ல்; தண்டவாளத்தில் தலை!

செங்கல்பட்டு அண்ணா நகரைச் சேர்ந்த பெயிண்டர் ஜெகதீஸ்வரன் 22, காதலித்துத் திருமணம் செய்த கொண்டார். அதன் பின் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை, “21 வயதுக்கு முன் யாரும் திருமணம் செய்ய வேண்டாம்; 25 வயதுக்கு மேல் செய்தால் தான் வாழ்க்கை சரியாக இருக்கும்” என இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டார். பின்னர், விரைவு ரயில் முன் பாய்ந்தார்.ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 5, 2026
செங்கல்பட்டு இன்று வெளியே செல்வோர் கவனத்திற்கு

செங்கல்பட்டு இன்று (பிப்ரவரி-05) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News February 5, 2026
செங்கல்பட்டு: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

செங்கல்பட்டில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க
News February 5, 2026
செங்கை: ஆதார் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு!

செங்கை மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே <


