News September 18, 2025
செங்கல்பட்டு: B.Sc, BE, B.Tech, BCA படித்தவர்களா நீங்கள்?

செங்கல்பட்டு மக்களே ஐடி துறையில் சாதிக்க விரும்புபவரா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ. தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் கணினி அறிவியல், ஐடி துறையில் ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்களுக்கு டெவலப்பர் பணிக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேலும், இதில் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னணி தனியார் நிறுவனங்களில் உறுதியாக வேலை ஏற்படுத்தி தரப்படும்.<
Similar News
News March 4, 2026
குஷியில் மதுராந்தகம் மக்கள்!

மதுராந்தகத்தில் 2.10 ஏக்கர் பரப்பளவில் இருந்த பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு பிப்ரவரி 2024ம் வருடம் பூமி பூஜை போடப்பட்டு புதிய பேருந்து நிலையம் கட்ட வேலை தொடங்கப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற இருக்கிறது. பேருந்து நிலையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
News March 4, 2026
செங்கல்பட்டு: செல்வப்பெருந்தகை- முதல்வர் சந்திப்பு!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மகள் அக்சயா பிரியா – டாக்டர் ஆர்ஜன் ராயர் ஆகியோரின் நிச்சயதார்த்த விழா மாமல்லபுரம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நேற்று (மார்ச். 3) இரவு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று வாழ்த்தினர். தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வரும் நிலையில், இந்த சந்திப்பு அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
News March 4, 2026
செங்கல்பட்டில் சாகும் வரை சிறை

புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிலிப்ராஜ் (30). இவர் சென்னை குரோம்பேட்டை நியூ காலனியில் மேஸ்திரியிடம் வேலை செய்து கொண்டு அங்கேயே மற்ற தொழி லாளிகளுடன் தங்கி இருந்துள்ளார். 1.1.2011 அன்று சக தொழிலாளியுடன் ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லை போட்டு கொன்றுள்ளார். இந்த வழக்கில் பிலிப்ராஜ்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி செங்கல்பட்டு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.


