News February 23, 2026

செங்கல்பட்டு: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு!

image

செங்கல்பட்டு மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினாப் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு <>க்ளிக் <<>>செய்து புகார் தெரிவியுங்க. இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 25, 2026

செங்கல்பட்டு: உடல் தூக்கி வீசப்பட்டு பலி

image

காஞ்சிபுரம் மாவட்டம், புதுப்பட்டு, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த தயாளன் (48), மேல்மருவத்தூர் அருகே செயல்பட்டு வரும் டிவிஎஸ் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கம் நோக்கி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றபோது, திருச்சி மார்க்கத்தில் இருந்து வந்த அதிவேக ரயில் மோதியதில் அவர் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

News February 25, 2026

செங்கல்பட்டு: திக்கு முக்காடும் மக்கள்!

image

கடற்கரை–செங்கல்பட்டு தடத்தில் எழும்பூர் மேம்பாட்டு பணிகளால் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மேலும் 26 ரயில்கள் குறைக்கப்பட்டதால் பயணியர் அவதி தொடர்கிறது. 208 ரயில்கள் 164 ஆக குறைந்துள்ளன. 20,000 பேர் பேருந்து, மெட்ரோ போன்ற மாற்று போக்குவரத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். எழும்பூர்–பரங்கிமலையிலிருந்து செங்கல்பட்டு வரை 26 சிறப்பு ரயில்கள் ஏப்.5 வரை இயக்கப்படும்.

News February 25, 2026

வண்டலூரில் கோர விபத்து; சம்பவ இடத்திலேயே பலி!

image

வண்டலூர் – செங்குன்றம் பிரதான சாலையில் நேற்று மினி பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் வாகனத்தை ஒட்டியது விபத்திற்கான காரணம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

error: Content is protected !!