News December 15, 2025
செங்கல்பட்டு: 3000 கோடி வீண்?

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், இரும்புலியூர்-மஹிந்திரா சிட்டி இடையே ரூ. 3,100 கோடி மதிப்பிலான உயர்மட்ட மேம்பாலச் சாலைத் திட்டம் அமைக்கப்பட இருந்தது. இருந்தும் தமிழக அரசு ஒன்றரை ஆண்டுகளாக அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மத்திய அரசின் நிதியில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் பணிகள் தொடங்கப்படாவிட்டால், இத்திட்டம் கைவிடப்படும்.
Similar News
News December 17, 2025
செங்கல்பட்டு: போலீஸ் அத்துமீறலா..? ஓரு CALL போதும்!

செங்கல்பட்டு மக்களே.., போலீஸ் உங்கள் மீது தேவையற்ற வன்முறையில் ஈடுபட்டாலோ, ஆம்புலன்ஸ் சேவை , விபத்து, வன்முறை, சீண்டல் போன்ற எவ்வித அவசர உதவிக்கும் 112, 1070 ஆகிய ஹெல்ப் லைன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களது புகார்களை தெரிவித்தால் உடனடியாக தீர்விற்கான உதவிகள் வழங்கப்படும். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News December 17, 2025
செங்கல்பட்டு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

செங்கல்பட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் டிச.19 அன்று நடைபெற உள்ளது. 50க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள், திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு சுமார் 5000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது. இம்முகாம் தொடர்பான விவரங்களுக்கு 044-27426020/9499055895/ 9486870577/9384499848 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.ஷேர் பண்ணுங்க.
News December 17, 2025
செங்கை: நொடி பொழுதில் விபத்து; சம்பவ இடத்திலேயே பலி!

திருக்கழுக்குன்றம் அடுத்த நெம்மேலி பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த்(28). டைல்ஸ் ஒட்டும் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு ஒரு வயதில் மகள் உள்ளார். நேற்று காலை கீரப்பாக்கம் பகுதி அருகே வந்து கொண்டிருந்த போது பிரசாந்த் முன்னால் சென்ற ஆட்டோவை முந்தி செல்ல முயன்றுள்ளார். இதனால் எதிரே வந்த பஸ் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து யுயிரிழந்தார். போலீசார் விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.


