News December 19, 2025
செங்கல்பட்டு வைரல் லிங்க்; காவல்துறை எச்சரிக்கை!

செங்கல்பட்டு மாநகர காவல் துறை எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், ஒவ்வொரு குடிமகனுக்கும் மத்திய அரசு ரூ.30,000 வழங்கும் திட்டம் என மோசடி லிங்க் உடன் போலி செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இது போன்ற போலியான செய்திகளை நம்ப வேண்டாம். போலியான லிங்க் மோசடிக்கு வழிவகுக்கும் எனவும், இது போன்ற திட்டம் எதுவும் இல்லை என்று காவல்துறையும் எச்சரித்துள்ளது.
Similar News
News December 21, 2025
செங்கல்பட்டு: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
News December 21, 2025
செங்கல்பட்டு: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News December 21, 2025
செங்கல்பட்டு: பணியின் போது மயங்கி விழுந்து பலி!

திருச்சியைச் சேர்ந்த அரசு விரைவுப் பேருந்து டிக்கெட் பரிசோதகர் விஜயன் அச்சரப்பாக்கம் அருகே பணியின்போது உயிரிழந்தார். திண்டிவனத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற பேருந்தில் ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே அவர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்ல முயன்றனர்; ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


