News September 20, 2025

செங்கல்பட்டு: வெந்நீரில் விழுந்து 3 வயது குழந்தை பலி

image

செய்யூர் அடுத்த சின்னவெண்மணியில், விளையாடும் போது தவறி வெந்நீரில் விழுந்து 3 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. லட்சுமணன்(33), சத்தியா (28) தம்பதியில் 3 வயது மகளான தீபிகா கடந்த செப்.11ம் தேதி பசுவுக்கு கஞ்சி காய்ச்ச வைக்கப்பட்டு இருந்த வெந்நீரில், தவறி விழுந்துள்ளார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குழந்தை வைத்துள்ளவர்கள் கவனமாக இருங்கள்.

Similar News

News September 20, 2025

செங்கல்பட்டில் அரசு வேலை; ரூ.22,500 சம்பளம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் சமுதாய வள பயிற்றுநருக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சார்ந்த சுய உதவிக்குழு உறுப்பினர்களாக இருக்க வேண்டும். இதற்கு மொபைல் போன் செயலிகளை பயன்படுத்த தெரிந்தால் போதும். இந்த பணிக்கு மாதம் ரூ.22,500 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம். செம்ம வாய்ப்பு ஷேர் பண்ணுங்க.

News September 20, 2025

செங்கல்பட்டு: 10th பாஸ் போதும்…காவல்துறையில் வேலை!

image

தமிழ்நாடு காவல்துறையில் கான்ஸ்டபிள், சிறைக் காவலர், போன்ற பணிகளுக்கு 3,665 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதுக்கு மேல் இருந்து 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் ரூ.18,200-ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் நாளையே விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். காவல்துறையில் வேலை தேடுவோருக்கு ஷேர்.

News September 20, 2025

செங்கல்பட்டு: ஆயுத பூஜைக்கு சிறப்பு ரயில்

image

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வரும் செப்.26ந்தேதி முதல் அக். 26ந்தேதி வரை நெல்லை – செங்கல்பட்டு – நெல்லை இடையே வண்டி எண் (06154 & 06153) வாரம் வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமையில் பகல் நேர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று செப்.20 காலை 8 மணிக்கு துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்ட நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!