News December 30, 2025

செங்கல்பட்டு விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகளின் “நலன் காக்கும் நாள் கூட்டம் இன்று (டிச- 30) காலை 10:30 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், இக்கூட்டத்தில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை மனுக்களாக, அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளது.

Similar News

News January 9, 2026

செங்கை: பொங்கல் பரிசில் பிரச்னையா? உடனே Call!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஜன-8) முதல் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.3000 பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இதில் ஏதேனும் பிரச்சனை என்றால் புகார் அளிக்க மாவட்டம் சார்பில் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கை 94983 41045, 94450 00172, மதுராந்தகம் – 94450 00174, திருக்கழுகுன்றம் 94450 00173, திருப்போரூா் – 94457 96413, வண்டலூா் -94983 41047, 7. வட்ட வழங்கல் அலுவலா் செய்யூா் – 94450 00175.

News January 9, 2026

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மஞ்சள் அலெர்ட்!

image

தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் நாளை ஜன.10 அன்று மிக கன மழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜன-11 அன்றும் மழை இருக்குமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே நாளை முதல் செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலான மழையை எதிர்பார்க்கலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News January 9, 2026

செங்கல்பட்டில் பரபரப்பு!

image

செங்கல்பட்டு அருகே அடுக்குமாடி குடியிருப்பின் 8-வது தளத்திலிருந்து விழுந்து சிறுவன் நவீன் பலியானார். படுக்கையறை ஜன்னலில் பாதுகாப்பு கம்பிகள் இல்லாததால், சோபாவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் தவறி விழுந்தது விசாரணையில் தெரியவந்தது. கட்டுமான நிறுவனத்தின் அஜாக்கிரதையே உயிரிழப்புக்கு காரணம் எனக்கூறி குடியிருப்புவாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

error: Content is protected !!