News August 20, 2025

செங்கல்பட்டு: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு

image

செங்கல்பட்டு மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இதைப்பெற ▶️குடும்ப அட்டை ▶️வருமானச் சான்று ▶️ குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட சான்றுகளுடம் செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம் அல்லது <>உங்களுடன் ஸ்டாலின்<<>> முகாமில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 1800 425 3993 அழைக்கவும். SHARE பண்ணுங்க

Similar News

News February 9, 2026

செங்கல்பட்டில் EB பில் எகுறுதா..?

image

செங்கல்பட்டு மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <>கிளிக் <<>>செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ‘Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 9, 2026

செங்கல்பட்டு: குளியலறையில் காத்திருந்த எமன்!

image

சோழிங்கநல்லூர் அண்ணா தெருவில் தனியார் ஹோட்டல் உள்ளது. இங்கு திருவண்ணாமலையை சேர்ந்த சங்கர் (27) என்பவர் தங்கி பணி புரிந்து வந்துள்ளார். நேற்று அறையில் உள்ள குளியலறைக்கு சென்று வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செம்மஞ்சேரி போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

News February 9, 2026

செங்கல்பட்டு அருகே தூக்கில் தொங்கிய கணவன்!

image

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் கண்ணதாசன் (34), இவர் குடும்பத்து டன் காட்டாங்கொளத்தூரில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கண்ணதாசன் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி திட்டி தீர்த்துள்ளார். மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!