News October 2, 2025

செங்கல்பட்டு: ரயில்வேயில் வேலை.. ரூ.35,400 சம்பளம்

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8850 டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சீனியர் கிளர்க் உள்ளிட்ட பதவிகளுக்கான காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 12th, ஏதேனும் ஓர் டிகிரி முடித்தர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.35,400 வழங்கப்படுகிறது. இதற்கு அக்.21-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு இங்கே <>கிளிக்<<>> பண்ணுங்க.(SHARE)

Similar News

News October 2, 2025

செங்கல்பட்டு: குறைகளை இதில் புகார் அளிக்கலாம்

image

செங்கல்பட்டு மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை ‘TN SMART’ இணையதளத்தில் புகாராக பதிவு செய்யலாம். இதற்கு, ‘புகார் பதிவு’ என்பதை <>க்ளிக் <<>>செய்து, உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண், புகார் விவரம் மற்றும் அதன் புகைப்படத்தை சமர்ப்பிக்கவும். அவசர நிலைகளுக்கு 1077-ஐ அழைக்கவும். உங்கள் புகாரின் நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News October 2, 2025

மாமல்லபுரத்தில் 3 பேர் பலி: CM இரங்கல்

image

மாமல்லபுரம் சூளேரிகாட்டுக்குப்பம் கடற்கரையில் கடந்த 28-ம் தேதி அகரம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் தந்தை வெங்கடேசன் இவரது மகள்கள் கார்த்திகா (ம) துளசி ஆகியோர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இந்நிலையில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு CM ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த குடும்பத்தாருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

News October 2, 2025

செங்கல்பட்டு மக்களே பணம் போகும்! உஷார்

image

தமிழக சைபர்கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், What’s App, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனகூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய SMS-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. எனவே உஷாராக இருக்க வேண்டும் என்றனர். (ஏமாற்றத்திற்குள்ளானவர்கள் 1930க்கு புகாரளிக்கலாம்)

error: Content is protected !!