News June 5, 2024
செங்கல்பட்டு: ரயிலில் அடிபட்டு ராஜஸ்தான் இளைஞர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்துார் ரயில் நிலையம் அருகே நேற்று(ஜூன் 4) காலை, தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் ரயில் மோதி இறந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்று உடலை கைப்பற்றிய போலீசார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், உயிரிழந்த நபர் ராஜஸ்தானை சேர்ந்த பாபு ராம்(25) என்பதும், கவனக்குறைவாக தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி இறந்ததும் தெரியவந்தது.
Similar News
News March 7, 2026
செங்கல்பட்டு: இன்று என்ன பேச போகிறார் விஜய்?

செங்கல்பட்டு: மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் தவெக சார்பில் இன்று நடைபெறும் மகளிர் தினவிழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கிறார். தனியார் நச்சத்திர ஓட்டலில் பிற்பகல் 3 மணிமுதல் 5 மணிவரை இந்த விழா நடைபெறுகிறது. இந்நிலையில், மகளிர் மத்தியில் தவெக தலைவர் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
News March 7, 2026
செங்கல்பட்டு: உடல் தூக்கி வீசப்பட்டு பலி

செங்கல்பட்டு மாவட்டம் மெய்யூரைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் நேற்று தனது பைக்கில் மதுராந்தகம் நோக்கி சென்று கொண்டிருந்தார். மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகே சென்ற போது எதிரே வந்த லாரி மோதி தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். மேலும் உயிரிழந்த இளைஞருக்கு கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது விசாரணையில் தெரியவந்தது.
News March 7, 2026
செங்கல்பட்டு அருகே பயங்கர விபத்து… கர்ப்பிணி உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்த்தில் அதிவேகமாக சென்ற கார் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாசுதேவன் மற்றும் நிறைமாத கர்ப்பிணி மோனிகா ஆகியோர் காயமடைந்தனர்.இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் கர்ப்பிணியான வாசுதேவன் மனைவி மோனிகா உயிரிழந்தார்.காரை ஓட்டிய விக்னேஸ்வரனை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்


