News March 24, 2024

செங்கல்பட்டு: முன்னாள் அமைச்சர் காலமானார்

image

மதுராந்தகம் அருகே உள்ள பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் இராமகிருஷ்ணன். அச்சரப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று (1989) ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அதன் பிறகு கட்சி மாறி அதிமுகவில் இணைந்து கட்சியில் அச்சரப்பாக்கம் சட்டமன்ற தனி தொகுதியில் (1991 To 95) சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த ராமகிருஷ்ணன் இன்று (மார்ச்-24) காலமானார்.

Similar News

News April 19, 2025

பெண்கள் உதவி மையத்தில் வேலை

image

தாம்பரம் பெண்கள் உதவி மையத்தில், தொகுப்பூதிய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.10,000 – ரூ.12,000 வழங்கப்படும். பாதுகாப்பாளர் பணிக்கு பள்ளிப்படிப்பு முடித்த ஆண், பெண்ணும், பன்முக உதவியாளருக்கு சமையல் தெரிந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த லிங்கில் விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டு, வரும் 30ஆம் தேதிக்குள் சென்னை கலெக்டர் ஆபிசுக்கு நேரடியாகவோ, இ-மெயில் மூலமாகவோ அனுப்பலாம்.

News April 19, 2025

AC ரயிலின் கட்டண விவரம்

image

சென்னையில் இன்று தொடங்கிய AC வசதியுடன் கூடிய புறநகர் ரயிலில் பயணிக்க குறைந்தபட்சமாக ரூ.35, அதிகபட்சமாக ரூ.105 வசூலிக்கப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை ரூ.105 டிக்கெட் கட்டணம் ஆகும். சென்னை கடற்கரையில் இருந்து தம்பரத்திற்கு ரூ.85 டிக்கெட் கட்டணம் ஆகும். தாம்பரம் – எழும்பூருக்கு ரூ.60, செங்கல்பட்டு – எழும்பூருக்கு ரூ.85 டிக்கெட் கட்டணம் ஆகும். ஷேர் செய்யுங்கள்.

News April 19, 2025

AC புறநகர் ரயில் சேவை தொடங்கியது

image

சென்னையில் முதல்முறையாக AC வசதியுடன் கூடிய புறநகர் ரயில் சேவை இன்று (ஏப்ரல் 19) தொடங்கியது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை முதல் AC ரயில் இன்று புறப்பட்டது. சென்னை கடற்கரையில் இருந்து காலை 7 மணி, பிற்பகல் 3.45 மணி, இரவு 7.35 மணிக்கு இந்த AC ரயில் சேவை இருக்கும். இன்று காலை 7 மணிக்கு புறப்பட்ட AC ரயில் 8.45 மணிக்கு செங்கல்பட்டை சென்றடையும். ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!