News September 16, 2025

செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு

image

செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 11 பணியிடங்களை கொண்ட இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மாதம் ரூ.8,500- 23,800 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 25.09.2025 க்குள் அதிகாரப்பூர்வ மாவட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

Similar News

News September 16, 2025

செங்கல்பட்டு: மழையால் விமான சேவை பாதிப்பு

image

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு பெய்த கனமழையின் காரணமாக தோகாவிலிருந்து 317 பயணிகளுடன் மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த கத்தார் விமானம், பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. மேலும் துபாய், லண்டன், சார்ஜா ஆகிய விமானங்கள் வானில் வட்டமடித்து பின்பு தரையிறங்கின. மீனம்பாக்கதில் இருந்து லண்டன், துபாய், தாய்லாந்து, கத்தார், மொரிசியஸ் உள்ளிட்ட 10 விமானங்களும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

News September 16, 2025

செங்கல்பட்டு: 5 பேரை துரத்தி பிடித்த போலீஸ்

image

செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரயில் நிலைய சாலையில் இருந்து வெளியே வந்த நால்வர், போலீசாரைக் கண்டதும் தப்பிச் செல்ல முயன்றனர். நால்வரையும் மடக்கிப் பிடித்து போலீசார் சோதனை செய்த போது, அவர்களிடம் 5 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர்கள் நெல்லையை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

News September 16, 2025

செங்கல்பட்டு இரவு ரோந்து பணி விவரம்

image

செங்கல்பட்டில் நேற்று (செப்-15) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!