News April 18, 2025

செங்கல்பட்டு மாவட்ட சில செய்திகள்

image

➡தாம்பரம் ரயில் நிலையத்தில் நள்ளிரவில் ரயில்வே பாதுகாப்பு படையினர் தங்க பெண்களுக்கு ஓய்வு அறை அமைக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி. ➡ செய்யூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.3.5 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அரசாணை வெளியீடு. ➡மாமல்லபுரத்தில் ரூ.30 கோடி செலவில் சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று அறிவிப்பு.

Similar News

News July 6, 2025

VAO வேலை மதிப்பெண் பட்டியல்

image

சைக்கிள் , பைக் ஓட்டுத் திறனுக்கு 10 மதிப்பெண்கள். வாசிப்பு மற்றும் எழுத தெரிந்தால் 30 மதிப்பெண்கள். வசிப்பிடம் சான்றிதழுக்கு 35 மதிப்பெண்கள். சம்பந்தப்பட்ட கிராமத்தில் அல்லது தாலுகாவிலாவது வசித்திருக்க வேண்டும். நேர்காணல் 15 மதிப்பெண்கள். வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் நேர்காணல் நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கட்டாயம். ஷேர் பண்ணுங்க

News July 6, 2025

செங்கல்பட்டில் கிராம உதவியாளர் வேலை

image

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும்.வரும்செப்.2ஆம் தேதி தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை(044-27427417,27427418)தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<16962666>>தொடர்ச்சி<<>>

News July 6, 2025

தாம்பரத்தில் இன்று மின்தடை ஏற்படும்

image

தாம்பரத்தில் இன்று மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, கீழே வரும் பகுதிகளில் கரண்ட் கட். தாம்பரம், மாடம்பாக்கம், சுதர்சன் நகர், அம்பிகா நகர், ஞானந்தா நகர், கணபதி நகர், ஜெயின் சுதர்சன், தேனுகாம்பாள் நகர், ராகவேந்திரா நகர், கிருஷ்ணா நாகா, அன்சா கார்டன். பராமரிப்பு பணி முடிந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!