News February 17, 2026

செங்கல்பட்டு: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

செங்கல்பட்டில் வரும் (பிப்ரவரி 20) அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சினேகா தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கை மனுக்களை நேரடியாக அளித்து தீர்வு பெறலாம். அனைத்து தொடர்புடைய துறை அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டு, மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 18, 2026

செங்கல்பட்டு மக்களே பண மோசடியா? click!

image

லோன் மோசடி, சிட் ஃபண்ட், பரிசுச் சீட்டு, ஏலச்சீட்டு, கிரெடிட் கார்டு, டிஜிட்டல் பண மோசடிகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க TN போலீசில் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) என்ற சிறப்பு பிரிவு செயல்படுகிறது. இந்த மோசடியில் நீங்கள் சிக்கியிருந்தால் வடக்கு மண்டல SP-044-22500319, EOW CONTROLL ROOM- 044-22504332, செங்கல்பட்டு EOW அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். உடனடியாக பணம் திரும்ப கிடைக்கும். ஷேர் பண்ணுங்க.

News February 18, 2026

செங்கல்பட்டில் 250 கோழிகள் இலவசம்!

image

செங்கல்பட்டு மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News February 18, 2026

தாம்பரம்: புதுமணப்பெண் எடுத்த விபரித முடிவு!

image

தாம்பரம் அடுத்த இரும்புலியூர், முல்லை அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் மருத்துவராக உள்ளார். இவர் அபிநயா என்ற பெண்ணை காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மனைவியின் நடத்தையில் அருண்குமார் சந்தேகம் அடைந்ததால் அபிநயா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தாம்பரம் போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ., விசாரணை நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!