News August 2, 2024
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் திருவிழா நடைபெறுவதை ஒட்டி ஆகஸ்ட் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News August 13, 2025
தாம்பரம் இரவு நேர ரோந்து பணி காவலர் விவரம்

தாம்பரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், குறிப்பாக இரவு நேரங்களில் பணிக்கு செல்லும் பெண்கள், காவல் நிலையம் வாரியாக கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அனைவரும் தெரிந்துகொள்ள பகிருங்கள்.
News August 13, 2025
செங்கல்பட்டு: B.Sc,B.C.A,M.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc,BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 13, 2025
மாணவர் சேர்க்கை குறைவு; பள்ளிக்கல்வித் துறை விளக்கம்

செங்கல்பட்டு மாவட்டத்தில், 207 அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்ததற்கு, தமிழ்நாட்டில் குறைந்து வரும் பிறப்பு விகிதமே முக்கிய காரணம் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் இல்லாததும், பணி காரணமாக சில குடும்பங்கள் நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்ந்ததும் மற்ற காரணங்கள். பள்ளிகளை மூடுவது அரசின் நோக்கம் இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.