News March 21, 2024
செங்கல்பட்டு: மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் ரத்து

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் (மார்ச்.22) நாளை நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான முகாம்கள் நாடாளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 1, 2026
செங்கல்பட்டு: What’s App பண்ணுங்க.. உடனே தீர்வு!

செங்கல்பட்டு மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க
News February 1, 2026
வண்டலூர் அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவன் பலி

பொத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன் செங்கல்பட்டு கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் சென்றுள்ளார். அப்போது முன்னாள் சென்ற கார் மீது மோதி தமிழரசன் படுகாயம் அடைத்தார். குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 1, 2026
மாமல்லபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட அதிசயம்!

மாமல்லபுரம் கடற்கரையில் மண்ணில் புதைந்திருந்த பல்லவர் கால பாறை ஒன்று கடல் அரிப்பால் வெளிப்பட்டுள்ளது. படிக்கட்டுகள் போன்ற அமைப்புடன் காணப்படும் இந்த பாறை, பழங்கால கட்டுமானத்தின் சுவடாக கருதப்படுகிறது. பல்லவர் ஆட்சியில் கடற்கரையில் பல கோயில்கள் இருந்ததாக கூறப்படும் நிலையில், இது குளம் அல்லது கட்டிடப் பகுதி இருக்கலாம் என கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஜெ. ராஜேந்திரன் தெரிவித்தார்.


