News October 17, 2025

செங்கல்பட்டு மாணவர்களின் கவனத்திற்கு…

image

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், தமிழக அரசின் கல்வி உதவித்தொகையை வழங்குவதாக சில நபர்கள் கல்லூரி மாணவர்களை தொடர்பு கொண்டு, அவர்களுடைய வங்கி கணக்கு எண் மற்றும் பிற தகவல்களை பெற்று OTP மூலம் வங்கி கணக்கிலுள்ள பணத்தை ஏமாற்றி திருடும் சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறுகிறது எனவும், வங்கி கணக்கு பற்றிய விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News October 18, 2025

செங்கல்பட்டு மக்களே கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

image

செங்கல்பட்டில் உள்ள பெரும்பாலானோருக்கு, இ-சேவை மையங்கள் எங்கு உள்ளன என்று தெரியவில்லை. அதை இப்போது எளிதில் கண்டு பிடிக்கலாம். ஆம், <>இந்த லிங்கை<<>> க்ளிக் செய்து செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் உங்கள் தாலுகாவை தேர்ந்தெடுத்தாலே போதும். உங்கள் வீட்டை சுற்றி இருக்கும் அனைத்து இ-சேவை மையங்களையும் 1 நொடியில் உங்களுக்கு காட்டிவிடும். நீங்கள் மேப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

News October 18, 2025

செங்கல்பட்டு மக்களே வீடுகளில் இனி இது கட்டாயம்

image

செங்கல்பட்டு மக்களே அடுக்குமாடி குடியிருப்புகளை போல தனி வீடுகளுக்கு பார்க்கிங் கட்டாயம் என தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 3,300 சதுர அடி வரையிலான தனி வீடுகளில் 2 பைக், 2 கார்கள், 3,300 சதுரஅடிக்கு மேல் உள்ள வீட்டில் 4 பைக், 4 கார்கள் நிறுத்துமிடம் ஒதுக்குவது கட்டாயம் என விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. *தெரிந்தவர்களுக்கு மறக்காம இதை தெரியப்படுத்துங்க*

News October 18, 2025

செங்கல்பட்டு மக்களே ரயில்வேயில் வேலை ரெடி!

image

ரைட்ஸ் எனப்படும் ரயில்வே நிறுவனத்தில் சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் காலியாக உள்ள 600 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அனைத்து பதவிகளுக்கும் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். இதற்கு 18- 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.16,000-ரூ 29,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.12க்குள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!