News September 16, 2025
செங்கல்பட்டு: மழையால் விமான சேவை பாதிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு பெய்த கனமழையின் காரணமாக தோகாவிலிருந்து 317 பயணிகளுடன் மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த கத்தார் விமானம், பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. மேலும் துபாய், லண்டன், சார்ஜா ஆகிய விமானங்கள் வானில் வட்டமடித்து பின்பு தரையிறங்கின. மீனம்பாக்கதில் இருந்து லண்டன், துபாய், தாய்லாந்து, கத்தார், மொரிசியஸ் உள்ளிட்ட 10 விமானங்களும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
Similar News
News September 16, 2025
செங்கல்பட்டை சேர்ந்தவர் மாநில தலைவராக நியமனம்

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில அணி, பிரிவுகளுக்கு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மேற்கு தாம்பரம் மண்டலத்தில் உள்ள வழக்கறிஞர் குமரகுரு வழக்கறிஞர் பிரிவின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்கறிஞராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
News September 16, 2025
செங்கல்பட்டு: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில்,<
News September 16, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும் ரயில்வேயில் நிரந்தர வேலை

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <