News October 31, 2025

செங்கல்பட்டு: பைக் மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து

image

மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் மகேந்திரா சிட்டியில் இருந்து மதுராந்தகம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். இருங்குன்றம்பள்ளி அருகே வந்த போது பின்னால் வந்த அரசு பேருந்து கார்த்திக் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தப்பியோடிய ஓட்டுநர் நடத்துனரை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News

News October 31, 2025

செங்கல்பட்டு: Driving Licence வைத்திருப்போர் கவனத்திற்கு..

image

செங்கல்பட்டு மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல்<> இந்த <<>>லிங்கில் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News October 31, 2025

செங்கல்பட்டு: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)

News October 31, 2025

தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல்…பரபரப்பு!

image

தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம், மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் தலைமையில் இன்று மாநகராட்சி மைய அலுவலக மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. அப்போது அதிமுக கவுன்சிலர்கள் நாய், மாடு, பன்றி, கொசு வலை போன்ற பொம்மைகளோடு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!