News September 19, 2025
செங்கல்பட்டு: பெற்ற தாயை தீ வைத்து எரித்த மகன்

செங்கல்பட்டு நத்தம் பகுதியை சேர்ந்த எஸ்தர்(65) என்பவரது மகன் விக்டர் ராஜேந்திரன் (45). திருவள்ளூர், திருவாலங்காடு பகுதியில் வசித்த இவர் கடந்த 14ம் தேதி செங்கல்பட்டிற்கு வந்த தனது தாய் எஸ்தரிடம் குடிக்க பணம் கேட்டு கொடுக்காததால் அவர் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். சிகிச்சையில் இருந்த எஸ்தர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனால் கொலை வழக்காக மாற்றி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News September 19, 2025
செங்கல்பட்டு: 12th போதும் ரூ.81,000 சம்பளம்

எல்லைப் பாதுகாப்புப் படையில் ரேடியோ ஆபரேட்டர் (RO) & ரேடியோ மெக்கானிக் (RM) பிரிவில் கான்ஸ்டபிள் பணிக்கு 1,121 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ITI, 12th படித்தவர்கள் படித்திருந்தால் போதும். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். செப்.23 வரை இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
News September 19, 2025
சிட்லபாக்கம் ஏரியில் 2 சிறுவர்கள் மூழ்கி பலி

தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் ஏரியில் குளிக்க சென்ற வடமாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் மற்றும் லோகேஷ் ஆகிய 2 சிறுவர்களும் நீச்சல் தெரியாத காரணத்தால் நீரில் மூழ்கி பலியாகினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 19, 2025
செங்கல்பட்டு: வீட்டில் தங்கம் சேர செல்ல வேண்டிய கோவில்

செங்கல்பட்டு, காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ளது காளத்தீஸ்வரர் கோவில். இங்குள்ள சிவலிங்கத் திருமேனி சுயம்புவாகத் தோன்றியதாக சொல்லப்படுகிறது. பல்வேறு வேண்டுதலுக்காக இக்கோவிலுக்கு பக்தர்கள் குவிகின்றனர். அதில், முக்கியமாக இங்குள்ள நந்திதேவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், வீட்டில் தங்க நகைகள் சேரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. *நகை சேர்க்க விரும்பும் நண்பர்களுக்கு பகிரவும்*