News November 13, 2025

செங்கல்பட்டு: பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு

image

திருக்கழுக்குன்றம் கானகோவில்பேட்டையைச் சேர்ந்த பவித்ரா (25) நேற்று காலை 6:30 மணியளவில், கிரிவலப் பாதையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் அவர் அணிந்திருந்த 6 கிராம் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பினார். இதுகுறித்து பவித்ரா அளித்த புகாரின்பேரில், திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சங்கிலியைப் பறித்த மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Similar News

News November 13, 2025

செங்கல்பட்டு: கார் கட்டத்தில் ஒருவர் கைது

image

திருப்போரூர், தையூர் ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த தரணிகுமார் (40) என்பவரது வீட்டில் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்தவர், கேளம்பாக்கம், சாத்தங்குப்பத்தைச் சேர்ந்த முகேஷ் (30). கடந்த 8ஆம் தேதி, காரைச் சுத்தம் செய்வதாகக் கூறி எடுத்துச் சென்ற முகேஷ், திரும்ப வரவில்லை. தரணிகுமார் அளித்த புகாரின் பேரில், முகேஷின் மொபைல் சிக்னலை வைத்து போலீசார் நேற்று முன்தினம் இரவு அவரைக் கைது செய்ததுடன், காரையும் மீட்டனர்.

News November 13, 2025

செங்கல்பட்டில் இன்று இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டில் நேற்று நவ (12 ) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

News November 12, 2025

செங்கல்பட்டு: தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசு வேலை

image

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் இந்தியா முழுவதும் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <>இங்கு க்ளிக்<<>> செய்து (டிச.1க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், careers@ippbonline.in என்ற இமெயில் மூலமும் தகவல்களை அறிந்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!