News November 3, 2025

செங்கல்பட்டு: பெண்களிடம் அத்துமீறல்- கம்பி எண்ணும் காமுகன்!

image

பெரும்பாக்கம், எழில் நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர்(45). திருமணம் ஆகாத இவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். இதனிடையே சந்திரசேகர் கடந்த சில மாதங்களாக, சாலையில் செல்லும் பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளிடையே பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அப்பகுதியில் அச்சம் நிலவி வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் சந்திரசேகரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 3, 2025

செங்கல்பட்டு: 12th PASS போதும்! ரூ.71,900 வரை சம்பளம்!

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து நவ.16க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 3, 2025

செங்கல்பட்டு: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் அல்லது செங்கல்பட்டு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரிய படுத்துங்க.

News November 3, 2025

செங்கல்பட்டு: முதல்வர் மருத்துவ காப்பீடு பற்றி தெரியுமா?

image

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சுமார் 1.37 கோடி குடும்பங்கள் பயன்பெற்று வருகிறார்கள். பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உள்பட 1,090 சிகிச்சை முறைகளும் 8 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும், 52 பரிசோதனை முறைகளுக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 800 அரசு மற்றும் 900 தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் முதல் முதியவர் வரை பயன் பெறலாம்.

error: Content is protected !!