News September 27, 2025

செங்கல்பட்டு: பண்டைய பீரங்கி குண்டுகள் கண்டெடுப்பு!

image

செங்கல்பட்டு மாவட்டம் வள்ளிபுரம் பாலாற்றில், செய்யாறு கல்லூரி வரலாற்றுத் துறை விரிவுரையாளர் மதுரை வீரன், கள ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் பண்டைய கால பீரங்கி குண்டுகள், கல் குண்டு, கைத்துப்பாக்கி ஈய குண்டு, போர் வீரரின் ஆடை பொத்தான் ஆகியவற்றை அவர் கண்டெடுத்துள்ளார். இந்தக் கண்டுபிடிப்புகள் அப்பகுதியின் வரலாற்றை அறிய உதவுகின்றன. இந்த தகவலை பிறரும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

Similar News

News January 5, 2026

செங்கை: படுஜோர் விற்பனை; தட்டி தூக்கிய போலீஸ்

image

பொழிச்சலூர் மற்றும் பல்லாவரம் பகுதிகளில் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனை செய்த 6பேரை சங்கர் நகர் போலீசார் கைது செய்தனர்.தடாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் பல்லாவரம், திரிசூலம், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்றது உறுதியானது. கைதான கிஷோர், அசோக்குமார் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News January 5, 2026

செங்கை: அரசு பேருந்து சக்கரம் ஏறி பலி!

image

செங்கல்பட்டு அருகே நடந்த இரு வேறு சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர். திருக்கழுக்குன்றம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற கூலித்தொழிலாளி பழனி (58), அரசு பேருந்து மீது மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு விபத்தில், ஒரகடம் சாலையில் சென்ற இளைஞர் உதயா (21), தெள்ளிமேடு அருகே சாலைத் தடுப்பில் மோதி உயிரிழந்தார். இச்சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 5, 2026

செங்கை: நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்த காரால் பரபரப்பு!

image

செங்கல்பட்டு அடுத்த பழமத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாவேந்திரன் (25) என்பவர், வாடகை கார் ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஆலப்பாக்கம் அருகே கார் பழுதாகி நின்ற நிலையில், மீண்டும் இயக்க முயன்றபோது திடீரென கார் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைப்பதற்குள் கார் முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடாகியது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!