News February 25, 2026

செங்கல்பட்டு: திக்கு முக்காடும் மக்கள்!

image

கடற்கரை–செங்கல்பட்டு தடத்தில் எழும்பூர் மேம்பாட்டு பணிகளால் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மேலும் 26 ரயில்கள் குறைக்கப்பட்டதால் பயணியர் அவதி தொடர்கிறது. 208 ரயில்கள் 164 ஆக குறைந்துள்ளன. 20,000 பேர் பேருந்து, மெட்ரோ போன்ற மாற்று போக்குவரத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். எழும்பூர்–பரங்கிமலையிலிருந்து செங்கல்பட்டு வரை 26 சிறப்பு ரயில்கள் ஏப்.5 வரை இயக்கப்படும்.

Similar News

News February 27, 2026

செங்கல்பட்டு: மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்

image

பல்லாவரத்தில் 2014ஆம் ஆண்டு பிரிந்து சென்ற மனைவியை சேர்ந்து வாழலாம் என அழைத்து அவரை கழுத்தை அறுத்து கொன்ற வழக்கில் கணவனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து செங்கல்பட்டு மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவித்துள்ளது. முத்தாலம்மன் கோயில் தெருவை சேர்ந்த கோபிநாதன் மற்றும் அவரது மனைவி நிர்மலா தேவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அவரை திருப்பி அழைத்து கொலை செய்துள்ளார்.

News February 27, 2026

அறிவித்தார் செங்கல்பட்டு புதிய ஆட்சியர்

image

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலன்காக்கும் நாள் கூட்டம், கலெக்டர் மாலதி ஹெலன் தலைமையில், செங்கல்பட்டு கலெக்டர் கூட்ட அரங்கில், இன்று (பிப்.27 ) காலை 10:30 மணிக்கு நடக்கிறது. கூட்டத்தில், விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை விவசாயிகள் மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் கூறியுள்ளார். ஷேர் பண்ணுங்க.

News February 27, 2026

செங்கல்பட்டு VGP தீம் பார்க்கில் விபத்து!

image

ஈ.சி.ஆர்., சாலையில், ஈஞ்சம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் வி.ஜி.பி., பொழுது போக்கு பூங்காவில் இன்று சுற்றுலா வந்த கல்லூரி மாணவி ஜப்ரின் பாத்திமா என்பவர் ராக் & ரோல் ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். ராட்டினத்தில் சீட் பெல்ட் அணிவதற்குள் ஊழியர்கள் ராட்டினத்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ராட்டினத்தை இயக்கிய ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!