News October 14, 2025
செங்கல்பட்டு: சாலையை கடக்க முயன்றவர் பலி

சிங்கபெருமாள் கோவில் அடுத்த தெள்ளிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு,(52) ‘டைல்ஸ்’ ஒட்டும் வேலை பார்த்து வந்தார். ஸ்ரீபெரும்புதுார் – சிங்கபெருமாள் கோவில் சாலையில், தெள்ளிமேடு பேருந்து நிறுத்தம் அருகில், பாலு சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, திருவள்ளூரில் இருந்து சிங்கபெருமாள் கோவில் நோக்கி சென்ற ‘யமஹா எம்.டி.,’ பைக் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜாக்கிரதையா சாலையை கடந்து செல்லுங்க.
Similar News
News October 14, 2025
செங்கல்பட்டு: ரயில்வேயில் நிரந்தர வேலை; இன்றே கடைசி!

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News October 14, 2025
செங்கல்பட்டு: கல்லூரி மாணவன் விடுதியில் தற்கொலை

திருப்பத்தூரை சேர்ந்தவர் மாவோ (20). சேலையூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் இவரின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் இவரால் படிப்பை தொடர முடியவில்லை. எனவே கல்லூரிக்கு செலுத்திய கட்டணததை திரும்ப கேட்டுள்ளார். கல்லூரி நிர்வாகம் முறையான பதில் அளிக்காததால் மன உளைச்சலில் இருந்தவர் கல்லூரி விடுதியில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் பெரும் சோகம் செற்பட்டுள்ளது.
News October 14, 2025
குறைதீர்வு கூட்டத்தில் 312 மனுக்கள் ஏற்பு

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் நலன்காக்கும் நாள் கூட்டம், கலெக்டர் சினேகா தலைமையில், நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பரிமளா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய,312 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்களை விசாரித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார்.