News September 2, 2025

செங்கல்பட்டு: கோயில் நடை நேரம் மாற்றம்

image

திருப்போரூர் கந்த சுவாமி கோயிலில், நாள்தோறும் காலை 6மணி முதல் மதியம் 12:30மணி வரையும், மாலை 3:30மணி முதல், இரவு 8:30மணி வரையும் கோயில் நடை திறக்கப்பட்டு சாத்தப்படும். இந்நிலையில் வரும் செப். 7 ந்தேதி சந்திர கிரகணம் என்பதால் காலை 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பகல் 1 மணிக்கு நடை சாத்தப்படும். அதன் பின்னர் மறுநாள் 8-ந்தேதி காலை 6 மணிக்கு நடை திறக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News September 2, 2025

செங்கல்பட்டு: 10th பாஸ் போதும்.. காவல்துறையில் வேலை

image

செங்கல்பட்டு இளைஞர்களே காவல்துறையில் பணி செய்ய அருமையான வாய்ப்பு. தமிழக காவல்துறையில் ( Police Constables, Jail Warders & Firemen) காலியாக உள்ள 3,644 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18- 31 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,200-ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> வரும் செ.21க்குள் விண்ணப்பிக்கலாம்.ஷேர்

News September 2, 2025

செங்கல்பட்டு: இந்த முக்கியமான சான்றிதழ் உங்க கிட்ட இருக்கா…?

image

பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக ▶️பள்ளியில் சேர ▶️அரசாங்க வேலையில் பணியமர ▶️ பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்பளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ உடனே <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் தொலைந்து இருந்தால் மீண்டும் பெறலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News September 2, 2025

செங்கல்பட்டில் வீடு வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் செங்கல்பட்டு பரனூர் ஏரியின் அருகில் 53 கிரவுண்ட் இடத்தில் 698 முதல் 1,127 சதுர அடியில் வெவ்வேறு அளவுகளில் 15 மாடிகள் கொண்ட 116 குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடுகள் 39.58 லட்சம் முதல் 66 லட்சம் வரையிலான விலைகளில் உள்ளது. குலுக்கல் முறையில் பெற விரும்புவோர் செப். 5ம் தேதிக்குள் https://tnhb.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் .

error: Content is protected !!