News January 7, 2026
செங்கல்பட்டு: குடும்பத்தில் பிரச்னையா? உடனே CALL

18-49 வயதுடைய திருமணமான பெண்களில் 30% -க்கும் அதிகமானோர் மீது குடும்ப வன்முறை நிகழ்த்தப்படுவதாக NFHS தெரிவிக்கிறது. அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதன்படி, செங்கை பெண்கள் மீது ஏதேனும் குடும்ப வன்முறை நிகழ்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 99408 01968-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க கஷ்டப்படும் ஒருவருக்காவது உதவும்!
Similar News
News January 8, 2026
ராமேஸ்வரம்-தாம்பரம் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

ராமேஸ்வரம் – தாம்பரம் – ராமேஸ்வரம் இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் வண்டி எண் (06105 / 06106) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக வரும் ஜன.13, 14 ஆகிய இரண்டு நாட்களில் கூடுதலாக 2 பொது பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. 3 ஏசி பெட்டிகள், 6 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 6 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியான 1 இரண்டாம் வகுப்பு பெட்டி 1 லக்கேஜ் பெட்டி ஆகும்.
News January 8, 2026
செங்கை: ரேஷன் பொருட்கள் வாங்குவதில் பிரச்னையா?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) செங்கல்பட்டு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.
News January 8, 2026
செங்கை: அனைத்து Certificate- உம் இனி ஆன்லைனில்!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யலாம். ஷேர் பண்ணுங்க


