News November 20, 2025

செங்கல்பட்டு: கார் மோதியதில் போலீஸ் பரிதாப பலி!

image

செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர், காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் அழகேசன் (45) இவர் நேற்று மதியம் தனது இருசக்கர வாகனத்தில் கூவத்தூர் காவல் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News November 23, 2025

செங்கல்பட்டு: செல்வம் கொழிக்க வைக்கும் லட்சுமி குபேரர் கோயில்

image

செங்கல்பட்டு மாவட்டம் இரத்தினமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது லட்சுமி குபேரர் கோயில். இந்தியாவிலேயே லட்சுமி குபேரருக்கு என்று தனி கோயில் இருப்பது இங்கு மட்டும்தான் என்று கூறப்படுகிறது. இங்கு லட்சுமி தேவியும் குபேரரும் இணைந்து அருள்பாலிக்கின்றனர். செல்வத்திற்கு அதிபதியான குபேரரை இங்கு வந்து வணங்கினால், செல்வம் பெருகும், வளம் கொழிக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க!

News November 23, 2025

செங்கல்பட்டு: LICENSE வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, இங்கே <>கிளிக் <<>>செய்து அப்டேட் செய்து கொள்ளலாம். செங்கல்பட்டு மக்களே இதனை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 23, 2025

செங்கல்பட்டு: HOUSE OWNER பிரச்சனையா? இத பண்ணுங்க!

image

வாடகை வீட்டில் வசிப்பவர்களா நீங்கள்? வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால் கவலைப்படாதீர்கள். உங்களின் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!