News February 4, 2026
செங்கல்பட்டு: கன்னத்தில் பளார் வாங்கி காலில் விழுந்த முதியவர்

தாம்பரம் பேருந்து நிலையம் அருகே ஜி.எஸ்.டி., சாலையில் நேற்று மதியம் பட்டபகலில் தனது தாயுடன் நடந்து சென்ற இளம்பெண்ணுக்கு முதியவர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த முதியவர் போதையில் இருந்த நிலையில், இளம்பெண் அந்த நபரை கன்னத்தில் அறைந்து போலீசில் ஒப்படைத்தார். இதனையடுத்து போதை ஆசாமி பெண்ணின் காலில் விழுந்து கெஞ்சியுள்ளார். இச்சம்பவத்தால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News February 5, 2026
செங்கை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

செங்கல்பட்டு மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News February 5, 2026
செங்கல்பட்டு: ஏறி இறங்கிய தண்ணீர் லாரி; துடிதுடித்து பலி!

வேளச்சேரியை அடுத்த பெரிய கோவிலம்பாக்கம், கே.பி.ஜி., நகரைச் சேர்ந்தவர் மாதவன் (70). இவர், நேற்று காலை எஸ்.கொளத்துார் பிரதான சாலை வழியாக நடந்து சென்றார். கோவிலம்பாக்கம் குளம் அருகே சென்ற போது, ரிவர்ஸில் வந்த தண்ணீர் லாரி மோதி உயிரிழந்தார். பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் விபத்து ஏற்படுத்திய தண்ணீர் லாரி ஓட்டுநரான மடிப்பாக்கம், ராஜாஜி நகரைச் சேர்ந்த சதீஷ் (33) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
News February 5, 2026
செங்கல்பட்டு: நடுவழியில் பற்றி எரிந்த கார்

சென்னை தி.நகர் பகுதியை சேர்ந்தவர் கோபி, இவர் நேற்று தனது மனைவியுடன் சென்னையில் இருந்து பொத்தேரி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் செல்லும்போது திடீரென காரின் முன் பக்கத்தில் இருந்து புகை வந்தது. சுதாரித்துக்கொண்ட கோபி காரை விட்டு இறங்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், கார் தீயில் எரிந்த நாசமானது.


