News January 16, 2026
செங்கல்பட்டு: கடலில் குளிக்க சென்றவர் பிணமாக வந்த சோகம்!

செய்யூர், சோத்துப்பாக்கம் பூங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் மகன் சத்யபிரியன் (16) 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று காலை முகத்துவாரம் பகுதிக்கு குளிக்க சென்றபோது கடலில் மூழ்கி மாயமானார். அங்கிருந்த மீனவர்கள் இவரை மீட்டு, செய்யூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சூணாம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 19, 2026
செங்கல்பட்டு 1,731 பேருக்கு புதிய ரேஷன் கார்டு

செங்கல்பட்டில் மாதம் தோறும் 2வது சனிக்கிழமைகளில் ரேஷன் கார்டில் திருத்தங்கள் செய்யப்படும். முகாம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மூலம் புதிய ரேஷன் கார்டு கோரி 2537 பேர் விண்ணப்பித்தனர். செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலூர் ஆகிய தாலுகாவில் இருந்து 1731 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
News February 19, 2026
செங்கல்பட்டில் பிணையமின்றி ரூ.40 லட்சம் கடனுதவி!

செங்கல்பட்டு மாவட்ட மக்களே சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? கடன் வாங்க சொத்து ஏதும் இல்லையா..? கவலை வேண்டாம். அரசு சார்பாக உங்களுக்கு ரூ.40 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கப்படுகிறது. இந்த TNCGS திட்டத்தில் இணைய, உங்கள் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி ( TAICO) , TAMCO, மாவட்ட தொழில் மையங்களில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது பயன் தரும்.
News February 19, 2026
அறிவித்தார் செங்கல்பட்டு கலெக்டர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் இளைஞருக்கு தாட்கோ மூலம் இலவச அழகு கலை பயிற்சி வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு முடித்த 18-35 வயது வரை உள்ள இருபாலரும் இதில் பங்கேற்கலாம். 90 நாட்கள் பயிற்சி முடித்தவுடன் ரூ.18,000- 25,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <


