News January 20, 2026
செங்கல்பட்டு: உங்கள் ரேஷன் அட்டை ரத்தாக வாய்ப்பு

ரேஷன் அட்டையில் உள்ள உறுப்பினர்கள் e-KYC அப்டேட் செய்யாவிட்டால், அந்த குறிப்பிட்ட உறுப்பினரின் பெயர் நீக்கப்படவோ அல்லது ரேஷன் அட்டை முடக்கப்படவோ வாய்ப்புள்ளது. போலி அட்டைகளைத் தவிர்க்க, உண்மையான பயனாளிகளைக் கண்டறிய உங்கள் ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று கைரேகை வைத்து அப்டேட் செய்யவேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அரசு உதவி எண் 1800 425 5901-ஐ அழைக்கலாம். உடனே இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
Similar News
News February 1, 2026
செங்கல்பட்டு தாய்மார்களுக்கு ரூ.11,000

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) மூலம் கர்ப்பிணிகள் & பாலூட்டும் தாய்மார்களுக்கு மொத்தம் ரூ.11,000 உதவி வழங்கப்படுகிறது. முதல் குழந்தைக்கு ரூ.5,000 மற்றும் 2-வது பெண் குழந்தை என்றால் ரூ.6,000 இந்த திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தை அணுகலாம். அல்லது <
News February 1, 2026
செங்கல்பட்டு: கர்ப்பமான பிளஸ்-1 மாணவி சாவு

செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் ஊராட்சியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 8ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பரிசோதத்தில் அவர் 4 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. மேலும், அவருக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்ததால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
News February 1, 2026
செங்கல்பட்டு ஆட்சியர் கறார்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பிப்ரவரி 1 இன்று ராமலிங்க அடிகளார் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, டாஸ்மார்க் மதுபான கடைகள் திறக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கறாராக கூறியுள்ளார். நினைவு தின நிகழ்வுகள் அமைதியாக நடைபெற அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


