News February 15, 2026

செங்கல்பட்டு: இளைஞர் உடல் சிதறி பலி!

image

காஞ்சிபுரம் அருகே மாடம்பாக்கம் சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 26) கூடுவாஞ்சேரி அருகே தண்டவாளத்தில் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். தகவலின் பெயரில் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று உயிரிழந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ராமச்சந்திரன் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 18, 2026

செங்கல்பட்டில் 250 கோழிகள் இலவசம்!

image

செங்கல்பட்டு மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News February 18, 2026

தாம்பரம்: புதுமணப்பெண் எடுத்த விபரித முடிவு!

image

தாம்பரம் அடுத்த இரும்புலியூர், முல்லை அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் மருத்துவராக உள்ளார். இவர் அபிநயா என்ற பெண்ணை காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மனைவியின் நடத்தையில் அருண்குமார் சந்தேகம் அடைந்ததால் அபிநயா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தாம்பரம் போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ., விசாரணை நடைபெற்று வருகிறது.

News February 18, 2026

செங்கல்பட்டில் EB பில் எகிறுதா..?

image

செங்கல்பட்டு மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <>இங்கு <<>>கிளிக் செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ‘Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!