News September 3, 2025

செங்கல்பட்டு: இரவில் ரயிலை மறித்து திடீர் போராட்டம்

image

சென்னை கடற்கரை- அரக்கோணம் மின்சார ரயில் நேற்று இரவு பாலூர் ரயில் நிலையத்தில் நாகர்கோவில் விரைவு ரயிலுக்கு வழிக்காக, 2வது நடைமேடையில் நிறுத்தப்பட்டது. 30 நிமிடங்களுக்கு மேலாக ரயில் புறப்படாததால் ஆத்திரமடைந்த பயணிகள் ரயில் முன்பு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு ரயில்வே போலீசார் பயணிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News September 4, 2025

தாம்பரம் இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

தாம்பரம் மாநகராட்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் (செப்.04) இன்று இரவு ரோந்து பணி பார்க்கும் காவலர்களின் தொலைபேசி எண்கள் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவலர்கள் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அப்போது ஏதேனும் அவசரம் என்றால் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்

News September 4, 2025

செங்கல்பட்டு இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, காவல்துறை இன்று இரவு ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு, மாமல்லபுரம், மற்றும் மதுராந்தகம் ஆகிய மூன்று வட்டங்களுக்குட்பட்ட ஒன்பது காவல் நிலையங்களில், துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) தலைமையில் காவல்துறையினர் ரோந்து செல்லவுள்ளனர்.

News September 4, 2025

நீர் நிலையை ஆக்கிரமித்து காவல் நிலையம்

image

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரியில் நீர் நிலையை ஆக்கிரமித்து புதியதாக காவல் நிலையம் கட்டப்பட்டது. இதனால் நில ஆக்கிரமிப்பு வழக்கு தொடரப்பட்டது. நீர் நிலையை ஆக்கிரமித்த காவல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென தமிழக அரசிற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

error: Content is protected !!