News March 1, 2026

செங்கல்பட்டு இன்று இரவு பணி செய்யும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டு நேற்று (பிப்-28) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.01) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News March 1, 2026

செங்கல்பட்டில் அதிரடி மாற்றம்!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் 19 தாசில்தார்கள் மற்றும் 4 துணை தாசில்தார்களுக்கு நிர்வாக காரணங்களால் பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வந்தவர்களுக்கு இந்த மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. புதிய இடங்களில் அவர்கள் விரைவில் பொறுப்பேற்க உள்ளனர். நிர்வாக பணிகள் சீராக நடைபெற இந்த மாற்றம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News March 1, 2026

செங்கல்பட்டு: உடல் தூக்கி வீசப்பட்டு கோர பலி

image

பள்ளிக்கரணையை சேர்ந்தவர்கள் பாலாஜி (23), கார்த்திகேயன்(23). இருவரும் கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் புதுச்சேரி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென குறுக்கே தெரு நாய் வந்ததால் நிலை தடுமாறி அவர்கள் இருவரும் சாலையில் விழுந்தனர். அப்போது எதிரே வந்த கார் மோதியதில் இருவரும் உடல் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

News February 28, 2026

செங்கல்பட்டு: குடும்பத்தில் பிரச்னையா?

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே இந்த எண்ணிற்கு (181) அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!