News December 26, 2025

செங்கல்பட்டு: இடியாப்பம் விற்க உரிமம் கட்டாயம்!

image

செங்கல்பட்டில் இடியாப்பம் விற்பனை செய்ய உரிமம் கட்டாயம் என உணவு பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது.சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனத்தில் பல்வேறு சிறுகுறு தொழில் விற்பனையாளர்கள் சுயதொழிலாக செய்து வரும் நிலையில் அவர்கள் ஆன்லைனில் இலவசமாக உரிமத்தை பெறலாம். ஆண்டுக்கு ஒருமுறை அவை புதுபிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தரமற்ற இடியாப்பம் விற்பனை செய்வதாக வந்த தகவலை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 26, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

செங்கல்பட்டு இன்று ( டிசம்பர் – 26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 26, 2025

செங்கல்பட்டு: வீட்டில் தங்கம் சேர செல்ல வேண்டிய கோவில்

image

செங்கல்பட்டு, காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ளது காளத்தீஸ்வரர் கோவில். இங்குள்ள சிவலிங்கத் திருமேனி சுயம்புவாகத் தோன்றியதாக சொல்லப்படுகிறது. பல்வேறு வேண்டுதலுக்காக இக்கோவிலுக்கு பக்தர்கள் குவிகின்றனர். அதில், முக்கியமாக இங்குள்ள நந்திதேவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், வீட்டில் தங்க நகைகள் சேரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. *நகை சேர்க்க விரும்பும் நண்பர்களுக்கு பகிரவும்*

News December 26, 2025

செங்கல்பட்டு: உங்கள் வீட்டிற்கு பட்டா இல்லையா?- CLICK HERE

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!